districts

img

‘இந்தியா கூட்டணிக்கு நாடு முழுவதும் வரவேற்பு': டி. ராஜா

புதுச்சேரி,அக்.2- இந்தியா கூட்டணிக்கு நாடு முழுவதும் வரவேற்பு அதிகரித்திருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவ லகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தேர்தலை நாடு எதிர்  கொள்ள உள்ள நிலையில் இந்தியா என்ற கூட்டணி அமைக்கப்பட்டு, இதற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மாற்று அரசு வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதனால் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அச்ச மடைந்துள்ளனர். அதனால் தான் அவர்கள் நிதானம் இழந்து பேசி வருகின்றனர். இந்தியா காப்பாற்றப்  பட வேண்டும் என்றால் பாஜக அரசு அகற்றப்பட வேண்டும். இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்ட ணியில் உள்ள அந்தந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளை விரைந்து தொடங்க வேண்டும்.  மாநிலத்துக்கு மாநிலம் பிரச்சனைகள் வரும். யதார்த்த பூர்வமாக செயல்பட வேண்டும். இன்றைய சூழலில் பாஜகவை வீழ்த்த வாக்குகளை ஒன்று திரட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் ஒரு வருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெறும், பாஜக வீழ்ச்சியடையும் போது பிரதமரை தேர்ந்தெடுப் போம். அது கூட்டான முடி வாக இருக்கும். இந்தியா கூட்டணியில் எந்த குழப்ப மும் வராது.  இவ்வாறு அவர் தெரி வித்தார். மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், கட்சியின் துணைச் செயலாளர் சேது செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.