districts

img

நரிக்குறவர் பகுதியில் சுதந்திர தினவிழா

சிதம்பரம், ஆக. 16- சிதம்பரம் வீனஸ் குழும பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. வீனஸ் கல்வி குழுமங்களின் தாளாளர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ரூபியாள்ராணி முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் செல்வகுமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளியின் தலைமை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வரவேற்றார். சுதந்திர தினத்தை யொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப் பட்டன. இதனை தொடர்ந்து  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நாடகங்கள், நடனம், பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.