districts

img

வீராணம் ஏரி நீரில் நச்சுக்கள் அதிகரிப்பு

சிதம்பரம்,ஜன.8- கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி சென்னையின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த ஏரி கடந்த 10 ஆம்  நூற்றாண்டில் சோழர்களால் உருவாக் கப்பட்டது. அங்கிருந்து குழாய்கள் மூலம்  சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படு கிறது.  இந்த ஏரி நீரில் நச்சுக்கள் கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கண்ட றிந்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து  2019 ஆம் ஆண்டு மார்ச்  வரை 16 கி.மீ. பரப்பில் உள்ள வீராணம் ஏரியின் 6 இடங்களில் இருந்து ஏரி நீர்  எடுக்கப்பட்டது.  இது ஆய்வுக்கு உட்படுத்திய போது வீராணம் ஏரி நீரில் 10 சயனோ பாக்டீரியாக்களின் உள்ளதால் இவைகள்  மூலமாக இந்த நச்சுக்கள் உருவானது  ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட் டுள்ளது. ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுக்கள் இருக்க கூடா தென உலக சுகாதார மைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வீராணம் ஏரியில் ஒரு லிட்டர் நீரில் 17.72 மைக்ரோ கிராம் முதல் 19.38 கிராம் வரை நச்சுகள் உள்ளது கண்டறியப்பட்டது.  இந்த நச்சுக்கள் மனித உடலில் உள்ள கல்லீரல் பாதிப்படைய செய்வதோடு, தோல்  வியாதிகளும் வருமென சென்னை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மழைக்காலங்களில் விளைநிலங்களில் தேங்கும் நீர் வடிவாய்க்கல்கள் மூலம்  வீராணம் ஏரிக்கு வருகிறது. இந்த நிலங்களின் விளைச்சலுக்கு பயன்படுத்தப்படும் உரங்களின், ஏரிக்கு வரும் நீரின் மூலமாக  இந்த நச்சுக்கள் வந்திருக்கும் என்று சென்னை  பிரசிடென்சி கல்லூரி தாவரவியல் ஆராய்ச்சி யாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  மேலும், இந்த நீரில் உள்ள அமினோ அமிலம் மூலம் புற்றுநோய் நோய் வருவ தற்கான அபாயம் உள்ளதாக அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.