districts

img

சென்னையில் பொதுபோக்குவரத்தில் பயணிப்பவர்கள் அதிகரிப்பு

சென்னை,ஏப்.26- கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் சென்னையில் தனிப்பட்ட வாகனங்களின் (பைக், கார்) பயன்பாடு குறைந்துள்ளது பேருந்து, ரயில்களில் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று தனியார் டிராவல்ஸ் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2018-ல் 31 விழுக்காடாக  இருந்த தனிநபர் வாகன பயன்பாடு 2022-ல் 25 விழுக்காடாக  குறைந்துள்ளது என்று 3,100 பயணிகளிடம் எடுத்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பொதுப் போக்குவரத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது. தினசரி பயணிகளின் எண்ணிக்கை கடந்த காலத்தில் 2 லட்சமாக இருந்தது.   4 ஆண்டுகள் பெருநகரப் போக்கு வரத்துக் கழகம் (எம்.டி.சி.) பேருந்துகள் மற்றும் உள்ளூர் ரயில்களில் தினமும் 36 லட்சத்து 38 லட்சம் பேர் பயணிக்கின்றனர். தாம்பரம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் அங்கு ஏற்பட்டுள்ள நெரிசலும் இதற்கு சான்றாக உள்ளது. பார்க்கிங் வசதியை விரிவுபடுத்தும் வகையில் அதன் டெர்மினி மற்றும் டெப்போக்களை மறுவடிவமைப்பு செய்யப் பட்டு வருகிறது.  சென்னை மெட்ரோ ரயில் நிலை யங்களில் 19 இடத்தில் 4 சக்கர வாகன பார்க்கிங் வசதி உள்ளது. இதுகுறித்து போக்கு வரத்து ஆர்வலர் ஒருவர் கூறுகையில்:- சாலையில் செல்லும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். சில ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி இல்லை. பைக்கில் வரும் பொதுமக்கள் அங்கு நிறுத்த இடம் இல்லாமல் அவதியடைகின்றனர். இதனால் அவர்கள் ஷேர் ஆட்டோ, கால் டாக்சியில் ரயில் நிலையம் வரை வருகின்றனர். ஷேர் ஆட்டோ கட்டணத்தில் ஒழுங்கு முறை இல்லை. அதனை சரி செய்யவேண்டும் என்றார்.