கள்ளக்குறிச்சி, ஜன. 22- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உளுந்தூர் பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவ லரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஷ்ரவன் குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி கள் முன்னணியில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது 5,46,938 ஆண் வாக்காளர் கள் 5,42,855 பெண் வாக்காளர்கள், 228 இதர வாக்காளர்கள் என மொத்தம் 10.90.021 வாக் காளர்கள் இடம்பெற்றி ருந்தனர்.” என்றார். சட்டமன்ற தொகுதி வாரியாக உளுந்தூர்பேட் டையில் 1,47,442 ஆண் வாக்காளர்களும், 1,44,419 பெண் வாக்காளர்களும், 51 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,91,912 வாக்காளர்கள் உள்ளனர். ரிஷிவந்தியத்தில் 1,35,388 ஆண் வாக்காளர் களும். 1,33,317 பெண் வாக்காளர்களும், 56 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,68,761 வாக்காளர்கள் உள்ளனர். சங்கராபுரத்தில் 1,32,722 ஆண் வாக்காளர்களும், 1,34,399 பெண் வாக்காளர் களும், 50 இதர வாக்காளர்க ளும் என மொத்தம் 2,67,171 வாக்காளர்கள் உள்ளனர். கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,39,270 ஆண் வாக்காளர் கள், 1,41,582 பெண் வாக்காளர்கள் 79 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,80,931 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார். தொடர்ந்த பேசிய ஆட்சியர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் இறுதி வாக்காளர் பட்டியலின்படி 5,54,822 ஆண்டு வாக்காளர்களும் 5,53,717 பெண் வாக்கா ளர்களும், 236 இதர வாக்கா ளர்களும் என மொத்தம் 11,08,775 வாக்காளர்கள் உள்ளனர்” என்றார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன். கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொ) கிருஷ்ணன். திருக்கோவி லூர் வருவாய் கோட்டாட்சி யர் கண்ணன்.தனி வட்டாட்சி யர் (தேர்தல்) பசுபதி.வட்டாட்சியர்கள். அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்.அரசு அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.