districts

சென்னை முக்கிய செய்திகள்

மீஞ்சூர் பகுதியில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

பொன்னேரி,நவ.20- மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தம் 55 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவிவருகிறது. காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பொன்னேரி, தடப்பெரும்பாக்கம், அத்திப்பட்டு அனுப்பம்பட்டு, பழவேற்காடு, வன்னிப்பாக்கம்,தேவம்பட்டு, நந்தியம் பாக்கம், அண்ணாமலைசேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. அவர்கள் அரசு மற்றும்தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமை யான இருமல், சளி இருப்பதால் கடும்  அவதி அடைந்து வருகின்றனர். தடப்பெரும் பாக்கம் ஊராட்சியில் மட்டும் 5 பேர் டெங்கு வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மர்ம  காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில்  ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட் டுள்ளது. இதைத்தொடர்ந்து தடப்பெருக் பாக்கம் ஊராட்சி முழுவதும் கொசு ஒழிப்பு  பணியாளர்கள் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு வீடுகளில் பொருட்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடம் கண்டறியப் பட்டு அகற்றப்பட்டன.மேலும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வீடுகளில் கொசு உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. தேங்கியுள்ள மழை நீரை அகற்றவும்,கொசு மருந்து தெளிக்கவும் ஊராட்சி நிர்வாகம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

காவலர் குடியிருப்பில்  மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு

சென்னை,நவ.20- எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் உள்ள  நரியங்காடு காவலர் குடி யிருப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் வசித்து வருகின்றனர்.  அதி காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்களின் இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. காலை பணிக்கு செல்வதற்காக காவலர்கள்  எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனங்களில் இருந்து புகை வருவதை கண்டு உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர். இதை யடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் தீயணைப்பு துறை வீரர்கள்  தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வாகனத் தில் இருந்த என்ஜின் மற்றும்  சைலன்ஸரில் இருந்த வெப்பத்தின் காரணமாக இரு சக்கர வாகனத்தின் கவர் மூலம் தீப்பற்றி எரிந்துள்ளதாக கூறப்படு கிறது. 

 பாலியல் தொல்லை:  பைக் டாக்சி டிரைவர் கைது

வர் கைது சென்னை, நவ. 20- இரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைக் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார். சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ‘எனது 13 வயது மகள் கடந்த 17-ந்தேதி இரவில் டியூசனுக்கு சென்று  விட்டு வீட்டுக்கு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் எனது மகளை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். என் மகளிடம் தவறாக நடந்த அந்த வாலிபர்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். இதையடுத்து காவல்துறையினர்  சம்பவம் நடந்த தெருவில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்  பாலியல் சீண்டல்  செய்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அதை வைத்து விசாரணை நடத்தியபோது அந்த மோட்டார் சைக்கிள் டி.பி.சத்திரம் பூஜ்ஜி தெருவை சேர்ந்த யோகேஸ்வரன் (வயது24) என்பவருக்கு சொந்தமான மோட்டார்சைக்கிள் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அவர்தான் என்று தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர். காவேரி இதய சிகிச்சை  மையம் 

பட்டதாரிகளுக்கு வங்கி பயிற்சி 

சென்னை,நவ.20- பிஎஃப்எஸ்ஐயின் மணிப்பால் அகாடமி, ஜனா சிறு நிதி  வங்கியுடன் இணைந்து, தனிநபர் வங்கியாளர்களை சிறு நிதி  வங்கியில் பணியமர்த்தவும் பயிற்சி அளிக்கவும் ஆஸ்பைரிங்  பேங்கர்ஸ்  என்ற  திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் திறமைகளைஅடையாளம் கண்டு வேலை யில் தீவிர பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இது கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு சமூகங் களுக்கு சேவையாற்றும், ஜனா சிறு நிதி வங்கிக்கு ஒரு வலுவான ஊழியர்களை உருவாக்குவதை நோக்கமாகக்  கொண்டுள்ளது. இளங்கலை இளம் அறிவியல்  பட்டம் பெற்ற நபர்களுக்கு இந்த திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு புதிய வாடிக்கையாளர் சேர்ப்பது, அவர்களுடனான உறவை மேம்படுத்துவது, கணக்கு மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்று அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பழங்குடி மக்களை தரையில் அமர வைத்த விவகாரம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுச்சேரி,நவ.20-  அரசு நிகழ்ச்சியில் பழங்குடியினர் தரையில் அமர வைத்த விவ காரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னணியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் வெளி யிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- புதுச்சேரி அரசின் சார்பில் பழங்குடியினர் பெருமை விழா நடை பெற்றது. கவுரவ விழா என்ற பெயரில் பழங்குடியினரை தரையில் அமர வைத்த நிகழ்வு புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி துணைநிலை ஆளுநர்,  முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற விழா வில் தனிமனித உரிமை, கவுரவம் பாதிக்கப்படும் என்றால் அந்த விழாவுக்கு பெருமை விழா என்று கூறுவது ஏமாற்றும் செயலாகும்.  உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில், ஒரு மனிதனுக்கு வாழ்வுரிமை என்பது உண்ண உணவு இருந்தாலும், இருக்க இடம் இருந்தாலும், உடுத்த உடை  இருந்தாலும், அவனை கவுரவமாக நடத்தப்பட வில்லை என்றால் அது வாழ்வுரிமையை பறிக்கும் செயல் என்று திட்ட கூறியுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்ற  ஏகாம்பரம் என்ற பழங்குடியின சங்கத் தலை வர் குரல் எழுப்பிய பின்னர் வெளியே இருந்த இருக்கைகள் உள்ள வரவழைக்கப்பட்டு தரையில் அமர்ந்தார்கள் இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். எனவே, புதுச்சேரி மாநில அரசு பழங்குடியினர் பெருமை விழா என்று கூறி, பழங்குடியின மக்களை தரையில் அமர்த்தப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஒரு பெரும் அரசியல் உள்ளது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, பழங்குடி மக்களை தரையில் அமர வைத்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.

டாஸ்மாக் கடைகளுக்கு  3 நாட்கள் விடுமுறை

திருவண்ணாமலை, நவ.20- திருவண்ணாமலையில் நடை பெறும் தீப விழாவை முன்னிட்டு வருகிற 25 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 27 ஆம் தேதி வரை 3 நாட்கள் திரு வண்ணாமலை நகரத்திற்கு அரு காமையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி காமராஜர் சிலை அருகில் உள்ள மதுபான கடை, வேங்கிக்கால் புறவழிச்சாலை, மணலூர்பேட்டை மதுபான கடைகள் மற்றும் நகரில் இயங்கும் தனியார் ஓட்டல், மதுபான பார்கள் அனைத்தும் மூட வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியர்  முருகேஷ் தெரிவித்துள்ளார்.

வீட்டு மனை பட்டா கேட்டு நரிக்குறவர்கள் ஆட்சியரிடம் மனு

 ராணிப்பேட்டை, நவ. 20 -  ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் சுமார் 40 ஆண்டுகளாக சொந்த வீடு இல்லாமல், கூடாரம் போட முடியாமல் வசிக்கும் நரிக்குறவர் வகுப்பைச் சார்ந்த 28 குடும்பங்கள் திங்களன்று (நவ. 20) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், ஆற்காடு பேருந்து நிலையம் இடித்து புதிதாக பேருந்து நிலையம் கட்ட உள்ளதால் தங்க இடமின்றி மழைக்காலத்தில் சிரமப்பட்டு வருவதாகவும், லாடவரம் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யாமல் அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என 28 நரிக்குறவர் வகுப்பைச் சார்ந்த குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்.

8 வயது மகனுடன்  தற்கொலைக்கு முயன்ற தாய்

கடலூர்,நவ.20- ஒவ்வொரு வாரமும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நவ.20 அன்று பெண் ஒருவர் தனது மகனுடன் கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு  வந்தார். அப்போது, மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.அப்போது, பண்ருட்டி தாலுகா கண்டரக் கோட்டையை சேர்ந்த பரமேஸ்வரி என்பது தெரியவந்தது.