புதுச்சேரி,ஆக.17-
தியாகிகள் உதவித் தொகை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை யொட்டி புதுச்சேரி அரசு சார்பில் விடுதலை போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடை பெற்றது. முதல்வர் ரங்க சாமி பங்கேற்று தியாகி களுக்கு இனிப்பு வழங்கி னார்.
பிறகு, உரையாற்றிய முதலமைச்சர் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக் கையை ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை யும் இருப்பதால்தான் சட்ட ப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம் என்றார்.
மாநில அஸ்தஸ்து கோரிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை தில்லிக்கு அழைத்து சென்று ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
புதுச்சேரியில் தற்போது 1,348 தியாகிகளும் உள்ள னர். மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மாநில அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த தொகை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறி வித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அனி பால் கென்னடி, ஆட்சியர் வல்லவன், அரசுச் செயலர் பத்மா ஜெய்ஸ்வால், செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநர் தமிழ்ச் செல்வன், துறை அதிகாரி கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.