districts

img

பட்டியல்-பழங்குடி மக்களுக்கான மானிய உதவிகள் உயர்வு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை, மே 6- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய உதவித் திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி நிலவரங்கள் குறித்து அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பேரவையில் இன்று வெளியிட்டார். சட்டப்பேரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- விவசாயத்திற்கான இலவச மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வழங்கப்படும் துரித மின் இணைப்பு (தட்கல்) மானிய உதவித் திட்டம்  1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் சார்பாக 90 விழுக்காடு வைப்புத் தொகை செலுத்தி இலவச மின் இணைப்பு வழங்க, 1,827 விவ சாயிகள் பயன்பெறும் வகை யில் ரூ.28.65 கோடி செல விடப்பட்டுள்ளது. புதிய மைன் மோட்டார் வாங்க 1800 ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் 200 பழங்குடியின விவசாயிகள் என மொத்தம் 2000 பேருக்கு ஒரு விவசாயிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடி யின மக்கள் நிலம் வாங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் குடி யிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.175 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மானியத்துடன் கூடிய கடன் (நிலம் வாங்கும் திட்டம் - நில மேம்பாட்டுத் திட்டம்). நிலமற்ற ஆதி திராவிட மகளிரை நில உடமையாளர்களாக்கி அவர்களது சமூக நிலை யினை உயர்த்திட சிறப்புத் திட்டம் அறிமுகப்ப டுத்தப்பட்டது.  மகளிர் இல்லாத குடும்பங்களில் ஆண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். ஆதி திராவிடர்களுக் கான தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் பழங்குடியினருக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. 10 ஆயிரம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட மாணவர்கள் வேலை வாய்ப்பு, போட்டித் தேர்வு களை எதிர்க்கொள்ள தேவையான பயிற்சிகள் ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும். நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவ சாயத் தொழிலாளர்கள் நிலம் வாங்க ரூபாய் 10 கோடி செலவில் மானி யம் வழங்கப்படும். பழுதடைந்துள்ள பத்து ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களுக்கு விடுதி களுக்கு ரூ.45 கோடியில் புதிதாக விடுதிகள் கட்டிக்  கொடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.