districts

img

‘யங் இந்தியா’ அமைப்பின் வேலூர் கிளை விஐடியில் துவக்கம்

யங் இந்தியா அமைப்பின் 67 வது கிளையான வேலூர் கிளை துவக்க விழா விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில்  யங் இந்தியா அமைப்பின் செயலாளர் (தமிழ்நாடு) சேவகன் வரவேற்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன் சிறப்புரையாற்றினார். தேசிய துணை தலைவர் அருண் ரத்தோட் வேலூர் அமைப்பின் புதிய நிர்வாகிகளான தலைவர் காதம்பரி ச. விசுவநாதன், செயலாளர் பிரசாந்த் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். மண்டல பொறுப்பாளர் விஷால் மேத்தா பலர் பங்கேற்றனர்.