districts

img

சங்க கொடியேற்றம் கல்வெட்டு திறப்பு

ராணிப்பேட்டை, ஜூலை 31 -

     ராணிப்பேட்டை மாவட்டத்தில் வி.இ. ஏகநாத ஈஸ்வரன் நினைவு சங்க கொடியேற்றம், பெயர் பலகை, கல்வெட்டு திறப்பு விழா காவேரிப்பாக்கம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலக நுழைவாயில் முன்பு திங்களன்று (ஜூலை 31) திட்ட இணை செயலாளர் ஜி. கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

   சங்க கொடியை மண்டல செயலாளர் எம். கோவிந்தராஜ் ஏற்றி வைத்தார். மாநிலத் துணைத் தலைவர் எஸ். ஜோதி தகவல் பலகை திறந்து வைத்தார். மாநில பொதுச் செயலாளர் மத்திய அமைப்பு சென்னை எஸ். ராஜேந்திரன் கல்வெட்டு திறந்து வைத்தார். மத்திய அமைப்பு வேலூர் திட்ட கிளைச் செயலாளர் டி. ஜெகன், திட்ட பொருளாளர் எம். சின்னத்துரை ஆகியோர் உரையாற்றினர்.

    முன்னதாக வேலூர் மின் பகிர்மான வட்டத்தின் திட்ட துணைத் தலைவர் சிறப்புநிலை ஆக்க முகவர் இரா. ரவீந்திரன் பணி நிறைவு விழா நடைபெற்றது.