சிதம்பரம், மே31- சிதம்பரம் ஞானபிர காசம் வடக்கு தெரு வில் சேக்கிழார் குரு பூசை வெள்ளிவிழா கரந்தை ஜெயகாந்தம் துரைக் கண்ணு சேக்கிழார் அறக்கட்டளை சார்பில் நடை பெற்றது. விழாவிற்கு மருத்துவர் ஆர்.முத்துக் குமரன் தலைமை தாங்கி னார். புலவர் ஞானபிரகாசம் ‘நம்பியாண்டார் நம்பிகள் வாழ்வும் வாக்கும்’ என்ற தலைப்பில் உரை யாற்றினார். அறக்கட்டளை செயலாளர் மருத்துவர் எஸ்.அருள்மொழி செல்வன் சேக்கிழார் மணிமண்டபம் குறித்து பேசினார். சீரமைக்கப்பட்ட சேக் கிழார் மணிமண்டபத்தை சுந்தரகுமாரி ராதா கிருஷ்ணன், குகப்பிரியா அமர்நாத் ஆகியோர் திறந்து வைத்தனர். வர்த்தக சங்க தலைவர் சதிஷ், செங்குட்டுவனுக்கு “தில்லை தீர்த்தக் குள பாதுகாப்பு செம்மல்” விருது, சென்னையைச் சேர்ந்த ஜி.சீனிவாசனுக்கு “சிவாச்சாரியார் செம்மல்” விருதும், திருநாரையூர் முத்துக்குமரசாமிக்கு “திரு முறை இசை செம்மல்” விருது, கோவை, மா.சிவ ஞானவதி “தமிழ்செம்மல்” விருது, முனைவர். பணசை மூர்த்திக்கு “சேக்கிழார்” விருது வழங்கப்பட்டது. இதில் சுந்தரகுமாரி ராதாகிருஷ்ணன், கணபதி, முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியர் செல்வம் நன்றி கூறினார்.