சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட 41ஆவது வட்டத்தில் மாமன்ற உறுப்பினர் பா.விமலாவின் தொடர் முயற்சியால் நேரு நகர் பிரதான சாலை, 8, 10, 11, 14 ஆகிய தெருக்களில் புதிய குழாய் அமைப்பதற்கான பணியை சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் துவக்கி வைத்தார். இதில் மண்டலக் குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், நிர்வாகிகள் ஜோதிபாசு அ.விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.