அயனாவரம் பாலவாயல் சென்னை ஆரம்ப பள்ளியில் ரூ.2.75 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை திறக்க கோரி கல்வி நிலை குழு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் ஆ. பிரியதர்ஷினி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் ஆக. 12 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெற்றியழகன், மண்டல குழு தலைவர் கு.பி.ஜெயின், ஆ.பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.