திருவண்ணாமலை,ஜன.11- திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் ஊராட்சி மன்றத்தில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள நிர்வாக அலுவலக கட்டிடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ், மக்களவை உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெ.ச.தி. சரவணன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.