districts

img

கொளத்தூரில் முதல்வர் படைப்பகம் திறப்பு

சென்னை, நவ. 4- கொளத்தூர் அகரம் ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெரு நகர் வளர்ச்சிக் குழுமம் இணைந்து ரூ.2.85 கோடி செலவில் “பகிர்ந்த பணி யிட மையம்” மற்றும் மாண வர்களுக்கான “கல்வி மையம்” என அனைத்து உள்கட்டமைப்பு வசதிக ளுடன் கூடிய முதல்வர் படைப்பகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாண வர்கள், பயன்பெறும் வகை யில் அவர்களுக்கு தேவை யான அனைத்து போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், மாணவர்கள் எந்த இடையூறுமின்றி படிக்கும் வகையில் அமைதியான சூழலும், நீண்ட நேரம் படிப்பதற்கு உகந்த இருக்கைகள், கணினி மற்றும் இணைய தள வசதியும் செய்யப் பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 51 பேர் அமர்ந்து படிக்க முடியும். அத்துடன், போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தொழில் தொடங்க இயலாத பெண்க ளுக்கும். ஆண்களுக்கும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கோ ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பணி செய்வதற்காக ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் 38 நபர்கள் முறையாக அமர்ந்து பணி செய்வதற்கான நல்ல சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 3 கலந்தாய்வு கூடங்களும், அதில் இரண்டு கூடத்தில் தலா 4 நபர்களும், ஒரு கூடத்தில் 6 நபர்களும் அமர்ந்து ஆலோசனை மேற்கொள்ளும் வகை யிலும், உணவு அருந்தி இளைப்பாறுவதற்காக ஒரு தளம் என மொத்தம் மூன்று தளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சென்னையில் முதல் முறையாக கொளத்தூரில் தமிழ்நாடு அரசின் சார்பில் “முதல்வர் படைப்பகம்” உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மக்களவை உறுப்பி னர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.