districts

img

புதிய காவல் நிலைய கட்டிடம் திறப்பு விழா

செங்கல்பட்டு,பிப்.21- செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு கட்டப்பட்ட புதிய காவல் நிலையத்தை காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.  செங்கல்பட்டு தாலுகாவிற்குட்பட்ட 27 ஊராட்சிகளை சார்ந்த  பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு போலீஸ் அவுசிங் கார்ப்ரேஷன் நிதியில்  ரூ1.18 லட்ச மதிப்பீட்டில்  ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மலையடி வெம்பாக்கம்,நேதாஜி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு காவல் நிலைய கட்டிடத்தை  தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம்  திறந்து வைத்ததை தொடர்ந்து செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், சார் ஆட்சியர் நாராயண சர்மா,துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிகிட் ஆகியோர் புதிய காவல் நிலையத்தில்  குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.  இந்நிகழ்வில் ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் திருமலை, உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள்,அரசியல் பிரமுகர்கள் மற்றும் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.