districts

img

சேர்க்காடு அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்: திறப்பு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு

வேலூர், ஜூலை 24 - வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் சேர்க்காட்டில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியின் புதிய கட்டிடத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமுலு விஜயன், மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) முனைவர் அ.மலர், திருவள்ளூர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் த. ஆறுமுகம் மற்றும் சேர்க்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் நா.இந்திரா காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.