அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் சுதேசி பனை தொழில் பயிலரகங்கம் மற்றும் பயிற்சி பட்டறை துவக்க விழா தச்சக்காட்டில் நடைபெற்றது. பல்கலைக் கழக விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி. ராஜ் பிரவின் தலைமை வகித்தார். மாணவ குழு பிரதிநிதி ஜெ. ஜெர்லின் ஸ்வதோ வரவேற்றார். தச்சக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சிவசங்கரி ராம் மகேஷ் துவக்க உரையாற்றினார்.