சென்னை, நவ.12- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்களில் துறை பொன் விழா ஆண்டை முன்னிட்டு சனிக்கிழமையன்று (நவ.12) நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை சார்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு செய்து, இளங்கலை மாணவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நுண் ரத்த நாளப் பரிசோதனைக் கருவி முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக இம் மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட் டுள்ளது என்றார். மேலும், நோயாளிக ளுக்கான பொது நூலகம் திறந்து வைக்கப் பட்டது. மூட்டு, தசை, இணைப்புத்திசு நோய்களி யல் சிறப்புப்பிரிவு தொடங்கப்பட்டு பொன் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
மஜ்ஜை மாற்று சிகிச்சை யானது ரத்த புற்றுநோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா என்கிற தீவிரமான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, உயிர் காக்கும் சிகிச்சை யாகும். நோயாளிகளுக்கு, இந்த உயர் சிகிச்சை, செலவின்றி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படுவதாகவும், பொதுமக்கள், இந்நோயாளிகளுக்கு உதவும் விதமாக, ரத்த கொடை, ரத்த பதிவேடு நிறுவனங்கள் மூலமாக கொடுத்து, இந்த உயிர்க் காக்கும் சிகிச்சை அளிக்க உதவலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மூட்டு, தசை, இணைப்புத்திசு நோய்களியல் சிறப்புப்பிரிவு 1972 ம் ஆண்டு துவங்கப்பட்டு, பேராசிரியர்,சந்திர சேகரன் முயற்சியால் தனித்துறையாக உருவாக் கப்பட்டதாகவும், இந்தியாவிலேயே முதன் முறையாக இந்தத்துறை சென்னை மருத்துக் கல்லூரியில் தான் உருவாக்கப்பட்டது என்றும் அமைச்சர் கூறினார். இந்நிகழ்வில் மருத்துவக் கல்வி இயக்கு நர் (பொ) மரு.சாந்திமலர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யின் முதல்வர் மரு.தேரணிராஜன், மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்களில் துறைத் தலைவர் மரு.அருள்ராஜ் முருகன், பேராசிரியர்கள் மற்றும் உயர் மருத்துவ அலுவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.