districts

img

பெண் வழக்கறிஞர்களுக்கு அடிப்படை வசதி கேட்டு கையெழுத்து இயக்கம்

சென்னை, டிச.3 - நீதிமன்றங்களில் பெண் வழக்கறி ஞர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய தனி ஓய்வறை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளது. அனைத்து இளம் ஆண், பெண்,  வழக்கறிஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்குவதை  உத்தரவாதப் ்படுத்த வேண்டும். பெண் வழக்கறி ஞர்கள் மற்றும் நீதிமன்ற பெண் ஊழிய ர்களின் குழந்தைகளை பராமரிக்கும் விதமாக நீதிமன்ற வளாகத்தில்  குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும். பாலியல் சீண்டல் களிலிருந்து பாது காக்க உச்ச நீதிமன்ற விசாகா தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்க ளிலும் புகார் குழு அமைக்க வேண்டும். இளம் பெண் வழக்கறிஞர்கள் அலுவல கம் அமைக்க, சட்ட புத்தகங்கள் வாங்க வங்கிகளில் குறைந்த வட்டி யில் கடன் வழங்க வேண்டும். நீதி மன்றங்களில் போதிய கழிப்பறை வசதி,  குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வழக்கறிஞர்கள் ஜனநாயக அமைப்புகளான பார் கவுன்சில் மற்றும்  வழக்கறிஞர்கள் சங்கங்களில் பெண்  வழக்கறிஞர்களுக்கு உரிய பிரதிநிதித் துவம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடை பெற்ற கையெழுத்து இயக்கத்தை மூத்த வழக்கறிஞரும், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான என்.ஜி.ஆர்.பிரசாத் துவக்கி வைத்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.சிவக்குமார், சென்னை  மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணி யம், செயலாளர் பி.சீனிவாசன், பொரு ளாளர் இ.வினோத்குமார், பெண் வழக்கறிஞர்கள் உப குழு கன்வீனர் சமந்தா,  மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.சீனு, ஆர்.திருமூர்த்தி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.