விழுப்புரம், ஜூன் 19-
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த ஆழங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (73). யாசகம் (பிச்சை) எடுப்பதை வாடிக்கையாக கொண்ட இவர், தான் யாசகம் எடுக்கும் பணத்தில் பள்ளி மாணவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி களை வழங்கி வந்துள்ளார்.
கொரோனா, விஷ சாராய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு அனுப்பவேண்டி தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தான் யாசகம் எடுத்த பணத்தை சேமித்து வைத்து தொடர்ந்து தான் தங்கி இருக்கும் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்பி வருகிறார்.
இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண நிதி கொடுக்க, தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிவாரண தொகை அனுப்ப விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு திங்கள்கிழமை (ஜூன் 19) வந்த அவர், தான் யாசகம் பெற்றதன் மூல மாக கிடைக்கப் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதலமைச் சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக ஆட்சியர் அலுவலக அதி காரிகளிடம் சென்றார்.
அப்போது அவர்கள் அந்த பணத்தை வங்கி மூல மாக அரசு நிதியில் நேரடி யாக செலுத்துமாறு அறி வுறுத்தியதன்பேரில் அவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று, தான் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை முதல மைச்சரின் பொது நிவா ரண நிதிக்காக அனுப்பி வைத்தார்.