திருவள்ளூர், மார்ச் 26- திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் கவரைப்பேட்டையில் திங்களன்று (மார்ச் 25), நடைபெற்றது. இதற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலா ளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.பி.சிவாஜி, தகவல் தொழில்நுட்ப அமைப்பின் மாநில துணைத்தலைவர் சி.எச்.சேகர், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்புவானன், அயலக அணியின் மாநில துணை நிர்வாகி கன்னிகை.ஸ்டாலின், மாவட்ட அமைப்பாளர் பகலவன், பொருளாளர் ரமேஷ், மதிமுக மாவட்ட செயலாளர் மு.பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர் செல்வம், கே.விஜயன், ஏ.ஜி.கண்ணன், கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், விசிக மாவட்ட செயலாளர் சி.நீலமேகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையத் இப்ராகிம், திக நிர்வாகி உதயகுமார், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் தேசிங்குராஜ் உட்பட பலர் பேசினர்.