districts

img

நகரை அழகுப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் அசத்தல்

கிண்டியில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் சென்னை, ஜூன் 14- சென்னை கிண்டியில் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் வாகன போக்குவரத்தை மாற்றுப் பாதையில் செல்லும்படி சோதனை அடிப்படையில் செவ்வாய், புதன் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. சென்னை ஜி.எஸ்.டி. சாலை விமான நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கத்திப் பாரா பாலத்தில் மேலே நேராக சென்று (கிண்டி போகும் வழி செல்லாமல்) சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம். பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் எதுவுமின்றி வழக்கமான சாலையில் (கத்திப்பாரா வழியாக) செல்லலாம். வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் ஏதுமின்றி வழக்கமான சாலையில் (கத்திப்பாரா சர்வீஸ் சாலை வழியாக) செல்லலாம். கத்திப்பாரா சர்வீஸ் சாலை (கிண்டி மவுத்தில்) வேலை நடைபெறும் போது வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் சிப்பெட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி திரு.வி.க தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம். என அரசு வெளியிட்டு அறிவிப்பில் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. நிதிசார் சேவைகள் கிடைப்பதில் கணிசமான தடைகள் நீட்டிப்பு சென்னை,ஜூன் 14 ஐஐடி சென்னை ஆராய்ச்சி பூங்கா மற்றும் இந்தியாவின் முன்னணி ஐஐடிஎம் இன்குபேஷன் செல் ஆகியவை ஒருங்கிணைந்து நாட்டில் “ நிதிசார் உள்ளடக்கலில் சவால்கள்’’என்பது குறித்த  ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன.  

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் வங்கிச் சேவைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ள போதிலும் மக்கள் தொகையில் அனைத்து பிரிவினருக்கும் முழு அளவிலான நிதிசார் சேவைகள் கிடைப்பதில் இன்னும் கணிசமான தடைகள் உள்ளன.  குறைந்த வருவாய் பிரிவினரும்  மூத்த குடிமக்களும் முறைசார்ந்த நிதிசார் அமைப்புகளிலிருந்து முழு அளவிலான நிதிசார் சேவைகளை அணுகிப் பெறுவதில் பல நேரங்களில் சவால்களை எதிர்கொள்கின்றனர்.  இத்தகைய தடைகள் மற்றும் சிரமங்கள் சிலவற்றை இந்த ஆய்வறிக்கை கோடிட்டு காட்டுவதோடு அவைகளை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. ஆய்வறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சியில் டிசிஎஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி எஸ். மகாலிங்கம், ஐஐடி சென்னை இயக்குநர்  வி. காமகோடி, ஐஐடிஎம் இன்குபேஷன் செல் பிரிவு தலைவர் அசோக் ஜூன் ஜூன் வாலா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நகரை அழகுப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் அசத்தல் சென்ன, ஜூன் 14-  சென்னையை அழகுப்படுத்தும் நோக்கத்தோடு மாநகராட்சி சார்பில் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் சாலையோர சுவர்களில் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.

அந்த வகையில், குடிசை  மாற்று வாரியக் குடியிருப்புகள், ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகள்,  பூங்காக்கள், அரசு பொதுக் கட்டிடங்கள், மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள  தூண்களில் என வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.  சாலையோர மரங்களில் பச்சை, மஞ்சல் வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. நீர்நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது. இதுபோல் பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராயபுரம் மண்டலத்தில் மாநகராட்சி நிர்வாகம் பயனற்ற பழைய டயர்கள், பாட்டில்கள், மின்சார பல்புகளில் செடிகளை வளர்த்து அலங்கார பொருள்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இதுகுறித்து ராயபுரம் மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில், பயனற்ற பழைய பொருட்களை மறு சுழற்சி செய்யும் வகையில், இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக டயர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பல்புகள் உள்ளிட்டவற்றை மறுசுழற்சி செய்து அலங்காரப் பொருட்களாக மாற்றி வருவதாகவும் பொதுமக்களும் இதுபோன்று தங்களது வீடுகளில் தயார் செய்யலாம் என்றார்.  இதன் மூலம் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துவதுடன், வீட்டையும் அழகுப்படுத்தலாம்      என்றார்.