சென்னை, மார்ச் 1- “நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி என்ற வதந்தியை நம்ப வேண் டாம்; பாஜக உடன் கூட்டணி தொடர்பாக பேச வில்லை’’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.சேலத் தில் அன்புமணி ராமதாஸ் புதனன்று செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு 70ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரி வித்துக் கொள்கிறேன். மேட்டூர் உபரி நீர் திட்டம் மூலம் 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணியில் பத்து சதவிகிதம் மட்டுமே முடிந் துள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும். சேலம் இரும்பாலை தனியாருக்கு விற் பனை செய்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நெய்வேலி நிலக்கரி நிறுவனத் துக்கு 25 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படு வதாக அறிவித்து, அதற்கான நிலம் கைய கப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும், அரசின் நடவ டிக்கை கண்டிக்கத்தக்கது. பொது நிறுவனங்களை ஒன்றிய அரசு தனி யார்மயமாக்குவதாக அறிவித் துள்ள நிலையில், நிலக்கரி நிறுவ னத்தை விற்க போவதாக தெரிவித்த நிலையில், எதற்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இந்த விஷயத்தில் முதல்வர் உடனடியாக தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் நிறை வேற்ற மறுத்துவரும் நிலையில், கடந்த மூன்று மாதத்தில் 15 பேர் தற்கொலை செய் துள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு தமிழ்நாடு ஆளுநர்தான் முழு பொறுப்பு. மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி என்ற வதந்தியை நம்பிவிட வேண்டாம். பாஜகவுடன் கூட்டணி தொடர் பாக பேசவில்லை. தேர்தலுக்கு ஐந்து மாதத்துக்கு முன்பாக தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.