கவிஞரும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில செயற்குழு உறுப்பினருமான ஜமீலா ராசிக் எழுதியுள்ள தமிழ்முஸ்லீம் பெண்களின் வாழ்வியலைத் தமிழ் மரபோடு சொல்லும் ‘அது ஒரு பிறைக்காலம்’ நூலை ஹெர் ஸ்டோரீஸ் இணைய பதிப்பு சார்பில் வியாழனன்று (ஜன.10) சென்னை புத்தகக்காட்சியில் கவிஞர் சல்மா வெளியிட்டார்.கவிஞர் சம்சுல்ஹூதா பானு, அபு.செய்யது சகாபுதீன் (சிறுபான்மைநலக்குழு), முனைவர் ஜி.அருண்குமார், ஆசிரியர் அஸ்வினா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்வை ஹெர் ஸ்டோரீஸ் நிறுவனர் நிவேதிதா லூயிஸ் ஒருங்கிணைத்தார்.