districts

பதட்டமான வாக்கு சாவடிகளில் ஆணையர் ரவி நேரில் ஆய்வு

தாம்பரம், பிப்.18  தாம்பரம் மாநக காவல் எல்லைகக் குட்பட்ட பகுதிகளில் 67 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களில் காவல்துறை ஆணையர் ரவி நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்ப டுத்தப்பட்டு உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக் குட்பட்ட பகுதிகளில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த  ஆணையர் ரவி  நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளையும் அவர் வழங்கி உள்ளார். சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் போலீ சார் தங்களது காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளில் தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரி வித்துள்ளார். தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 67 வாக்குச்சாவடிகள் பதட்ட மானவை என கண்டறியப்பட்டுள்ளது. கண்ணகி நகர், எழில் நகர், செம்மஞ்சேரி பகுதி களில் ஆய்வு செய்த அவர் பொதுமக்களை சந்தித்தும் பேசினார். வாக்குச்சாவடி மையங் களுக்கு அருகில் உள்ள வீடுகளில் இருப்ப வர்களிடம் அவர் நேரில் விசாரித்தார்.உங்கள்  பகுதியில் பிரச்சினைகள் ஏதும் உள்ளதா? என்று அவர் பெண்களிடம் கேட்டறிந்தார்.