districts

img

ஆராய்ச்சி, மேம்பாடு, தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்ய வலியுறுத்தல் சென்னையில் ‘அக்மீ 2023’ கண்காட்சி துவங்கியது

சென்னை,ஜூன் 15

     அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தி யாளர்கள் சங்கம் (ஏஐஇஎம்ஏ) ஏற்பாடு செய்திருந்த அக்மீ 2023  கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழனன்று (ஜூலை 15) தொடங்கி வைத்தார்.  

    இதில் பேசிய முக்கிய பிர முகர்கள் இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் அதிக முதலீடு களை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

     சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'நவீன உற்பத்தி என்ற கருப்பொருளில்  ஐந்து நாள் கண்காட்சி நடைபெறுகிறது. இயந்திரங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், ஆட்டோமேஷன் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்த தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். நேரடி விளக்கங்கள், தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் தயாரிப்பு வெளியீடுகளாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

    இயந்திர கருவிகளை ஏற்றுமதி செய்யும் உலகின் 28 வது நாடாகவும், அதிக இறக்குமதி செய்யும் 9வது நாடாகவும் இந்தியா உள்ளது. இந்த சந்திப்பின் மூலம் இந்திய உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று உறுதியாக தாம்  நம்புவதாக பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சுரஞ்சன் குப்தா கூறினார்.

   உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 435 நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளன. இயந்திரங்கள் கண்காட்சியை சுமார் 45,000 பேர் பார்வையிடுவார்கள்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   இந்தியா சீனாவிற்கு மாற்று ஆதார மையமாக காணப்படுவதால், இந்திய உற்பத்தித் துறையானது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு, தொழில்நுட்பத்தில் வலுவான முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்று கண்காட்சி துவக்கவிழாவில் பேசிய டைம்லர் இந்தியா மேலாண்மை இயக்குநர் சத்யகம் ஆர்யா கேட்டுக்கொண்டார்.  

    தயாரிப்புகளில் தரத்தை உயர்த்துவதன் மூலம் உலகில் நம்பகமான உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.முன்னதாக ஏஐஇஎம்ஏ தலைவர் டி.நலங்கிள்ளி , அக்மீ கண்காட்சி 2023 தலைவர் கே.சாய் சத்ய குமார் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.