புதுச்சேரி,ஜூன் 15-
அபகரித்த நிலத்தை மீட்டு தரக்கோரி முதல்வர் ரங்கசாமி கார் முன்பு தீக்குளிக்க முயற்சித்த குடும்பத்தினரை காவல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூரை அடுத்துள்ள கோர்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் அடியாட்கள் வைத்து அபகரித்தாக கூறப்படுகிறது.
இது குறித்து அருகில் அள்ள மங்களம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் செல்லதுரை அவரது மனைவி தவமணி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திற்கு வியாழனன்று(ஜூன் 15) தனித் தனியாக வந்தனர்.
முதல்வர் ரங்கசாமி பிற்பகல் 12 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்கு தனது காரில் வந்து இறங்கினார். அப்போது, செல்லதுரையின் மைத்துநர் தன் மீது மாசிலாமணி பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தார். உடனடி யாக முதல்வரின் பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார்.
செல்லதுரையின் மனைவி தவமணி முதல்வரின் காலை பிடித்து அழுது தரையில் புரண்டார்.
சட்டப்பேரவை காவ லர்கள் அவரை மீட்டனர். பிறகு, விசாரணை நடத்திய முதல மைச்சர், பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவித்த குற்றச்சாட்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.