districts

img

பெரியார் திடலில் தலைவர்கள் மரியாதை: சமூக நீதி நாள் உறுதி மொழியேற்பு

சென்னை, செப்.17- தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை பெரி யார் திடலில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு தி.க தலைவர் கி.வீரமணி தலைமையில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி, சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ், வேம்புலி, எம்.எஸ். மூர்த்தி ஆகியோர் தலைமையில்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக பெரியார் சமத்துவம்-சமூக நீதி ஓவியப்படக் கண்காட்சி திறந்து வைத்தனர். போராட்ட வாழ்க்கையில் சில களங்கள், சில கணங்கள்... எனும் தலைப்பில் ஓவியப்பட கண்காட்சி வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை கி. வீரமணி தலைவர் வெளியிட பேராசிரியர் வீ.அரசு பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) இயக்குநர் சிகாகோ மருத்துவர் சோம.இளங்கோவன் எழுதிய ‘அமெரிக்காவில் 50 ஆண்டுகள்’ புத்தகத்தை கவிஞர் கலி.பூங்குன்றன் பெற்றுக்கொண்டார்.  பெண் ஏன் அடி மையானாள்? என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கமும் நடைபெற்றது.