districts

img

நகராட்சி-பேரூராட்சிகளில் சிபிஎம் கவுன்சிலர்கள் பதவியேற்பு

சிதம்பரம், மார்ச் 2- நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். சிதம்பரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  5 ஆவது வார்டில் தஸ்லிமா,  33 ஆவது வார்டில் முத்துக்குமரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த இருவரும் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் முன்னிலையில் புதனன்று(மார்ச் 2) பதவி ஏற்றுக் கொண்டனர். இந் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, நகரச் செய லாளர் ராஜா,மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், திமுக நகரச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

கோட்டகுப்பம்
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் திண்டிவனம் கோட்டகுப்பம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் விக்கிர வாண்டி, அரகண்டநல்லூர், அனந்த புரம், செஞ்சி, மரக்காணம், திரு வெண்ணைநல்லூர், வளவனூர் உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். வானூர் வட்டத்திற்குட்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சி 18 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் போட்டியிட்ட ஃபர்கத் சுல்தானா வெற்றி பெற்றார். அவர், ஆணையர் பானுமதி தலைமையில் பதவி யேறறுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், சே.அறிவழகன், வட்டச் செயலாளர் எம்.கே.முருகன், கிளைச் செயலாளர் முகமது அனாஸ், வட்ட குழு உறுப்பினர்கள் அன்சாரி, சேகர் உட்பட பலர் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம்ட பரங்கிப் பேட்டை பேரூராட்சியில் திமுக தலை மையிலான மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 14 ஆவது வார்டில் வெற்றி பெற்ற ராஜேஸ்வரி பேரூராட்சி அலுவ லகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் இருந்தனர். இதேபோல், பெண்ணாடம் பேரூ ராட்சியில் 12 வது வார்டில் வெற்றி பெற்ற ஆர். விஸ்வநாதனுக்கு பேரூ ராட்சி செயல் அலுவலர் பதவி பிர மானம் செய்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி வட்டம் நாகோஜனஹள்ளி பேரூ ராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 வார்டு உறுப்பினர்களும் பதவி யேறறுக்கொண்டனர். 9 ஆவது வார்டில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கவுன்சிலர் எம். கடல்வேந்தன், பேரூராட்சி செயல் அலுவலர் மதியழகன் முன்னிலையில் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

பெரணமல்லூர்
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி 1 ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மா. கவுதம் முத்து வெற்றிபெற்றார். அவர், பெரணமல்லூர் பேரூராட்சி அலு வலகத்தில் செயல் அலுவலர் தமிழரசி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் பேரூராட்சி உறுப்பினர்கள் வேணி ஏழுமலை, ஆண்டாள் அண்ணா துரை, சிவராமன், சிவகாமி மனோகர், மோனிஷா மதன்ராஜ், பூங்காவனம் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.  அதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வன், பெரணமல்லூர் சேகரன், கிளைச் செயலாளர் ராஜசேகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கவுதம் முத்துவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, பெரணமல்லூர் அண்ணா சிலை அருகிலிருந்து ஊர்வலமாக பேரூ ராட்சி அலுவலகத்துக்கு சென்றனர்.