districts

img

சுருக்கு வலையை அனுமதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை

கடலூர், மே 29-

    கடலூர் மாவட்டத்தில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடலூர்  மாவட்ட குறை தீர்ப்பு கூட்டம் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சுருக்கு வலை மீன்பிடி தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டன. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி அளிக்க வேண்டி மாவட்ட நிர்வாகம், மீன்வளத் துறை அதிகாரிகள், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த விதமான தீர்வும் ஏற்படவில்லை.  

    எனவே,வல்லம் மற்றும் விசைப்படகுகளை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மீன்பிடி தடைக்காலம் முடிந்து தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கி ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.