districts

img

சிதம்பரத்தில் கருணை அடிப்படையில் 49 பேர் பணி நியமனம்

சிதம்பரம், அக்.1- சிதம்பரம் கிளை விழுப்பு ரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டு நர் மற்றும் நடத்துநர்களுக்க குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறப்பு விழா, பணிக்காலத்தில் இறந்த ஊழியர்கள் வாரிசுதாரர்கள் 49 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் 14 பேருக்கு காலமுறை பதவி உயர்வு ஆணை வழங்கும்  நடை பெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சி யர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். விழுப்புரம் அரசு போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் .ராஜ் மோகன்  வரவேற்றார். போக்குவரத்து துறை  அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை திறந்து ஊழியர் வாரிசுகளுக்கு  பணி நியமன ஆணையை வழங்கினர். தொழிற் சங்கத் தலைவர் தங்க. ஆனந்தன், விருத்தா சலம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ராதா கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர். கடலூர் கோட்ட பொது மேலாளர் எஸ்.ராஜா நன்றி கூறினார்.