தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு:- விசாகப்பட்டினத்தில் நடை பெற்ற மூன்றாவது அகில இந்திய மாநாட்டில் 12 மாநிலங்களிலிருந்து பிரதி நிதிகள் பங்கேற்றார்கள். நான்காவது மாநாட்டில் 16 மாநிலங்களிலிருந்து பிரதி நிதிகள் பங்கேற்று அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 10 கோடி 48 லட்சம் ஆதிவாசி, மலைவாழ் மக்கள் உள்ளனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 லட்சத்து 24 ஆயிரம் கோடியை மோடி அரசு மடை மாற்றம் செய்து வஞ்சித்துவிட்டது. தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல் அடிப்படையில் எஸ்.சி., எஸ்டி மக்களுக்கான நிதி ரூ.964 கோடி செலவிடப்படவில்லை. குறிப்பாக மலை வாழ் மக்களுக்கு ஒதுக்கீடு செய் யப்பட்ட நிதி ரூ.264 கோடி செலவிடப் படவில்லை. தமிழகத்தில் மலைவாழ் மக்களுக்குச் சொந்தமான இடங்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்கவேண்டும்.
இனச் சான்றி தழ்களைப் போராடித் தான் பெற்று வருகிறோம். சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 28 ஆண்டுகாலப் போராட்டத்தைத் தொடர்ந்து அதிகபட்சம் 38 பேருக்கு மலைக்குறவன் சான்றிதழ் பெற்றுக் கொடுத்துள்ளோம். தர்மபுரி மாவட்டத்தில் 12 ஆண்டுக ளுக்குப்பிறகு நம்முடைய போராட்டத் தின் பலனாக இனச்சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது. மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டாலும் கூட இன்னும் 60 ஆயிரம் மனுக்கள் அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை யில் மலைவாழ் மக்களுக்கு சாலை அமைக்க வேண்டுமென்ற பிரச்சனை யில் தொடர்ந்து மூன்று நாட்கள் காத்தி ருப்புப் போராட்டம் நடத்தினோம். மாவட்ட ஆட்சியர் வனஉரிமைச் சட்டத்தை முழு மையாகப் படித்துவிட்டு புலிகள் சரணால யப் பகுதியாக இருந்தாலும், வனத்துறை க்கு சொந்தமான பகுதியாக இருந்தாலும் மலை வாழ் மக்களுக்கான உரிமைகளை நிறைவேற்ற வேண்டுமென வன உரி மைச்சட்டம் கூறியுள்ளது. எனவே சாலை போடுவதற்கான பணிகள் தொடங்கும் என உறுதி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு மலைவாழ் மக்களை எப்படியெல் லாம் வஞ்சிக்கிறது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரியும். வேலுமணி, தங்கமணிக்கெல் லாம் தெரியும்.
இவர்கள் இப்பிரச்சனை யில் எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளனர். இவர்களது நோக்கமெல்லாம் “வாக்குகளைப்” பெறுவது மட்டுமே. நாமக்கல்லில் மாநாடு நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்தத் தரு ணத்தில் கூட வனத்துறை மலைவாழ் மக்க ளை பயிர் செய்யக்கூடாது என் அச்சுறுத்து வதோடு, அங்கு விளைந்த அண்ணா பழங்களையும் சேதப்படுத்தி உள்ளது. வெள்ளியங்கிரி மலையில் ஜக்கி வாசுதேவ் மலைவாழ் மக்களின் நிலங்க ளை ஆக்கிரமித்து வைத்துள்ளார். நீதிமன்றமே எப்படி இது சாத்திய மானது? அதிகாரிகள் என்ன செய்தார் கள்? அரசு என்ன செய்தது? என கேள்வி யெழுப்பியுள்ளது. அரசு ஜக்கிவாசுதே விடம் உள்ள நிலங்களை மீட்டு மலை வாழ் மக்களுக்கு வழங்கவேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி நாங்களே அந்த நிலத்தை மீட்போம்”. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சர வணன்: 1992-ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட சங்கம் இன்று கம்பீரமாய் வளர்ந்துள்ளது. இதற்குக்காரணம் செங்கொடி இயக்கம் ஆற்றிய தொடர் பணிகள் தான். குருமான்ஸ், கொண்டா ரெட்டி, நரிக்குறவர் சமூக மக்களுக்கு இனச்சான்றிதழ் பெற்றுக்கொடுத்தது நாம் தான். மலை மக்களை வனத்திலி ருந்து வெளியேற்றும் ஒன்றிய அரசின் முயற்சியை முறியடிப்போம். வஞ்சனை யாளர்களை வரும் தேர்தலில் தோற்க டிப்போம்.