சென்னை,பிப்.17- மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் திமுக சார்பில்போட்டியிடும் சென்னை மாநகராட்சி 75வது வட்ட திமுகவேட்பாளர் ரமணிலோகேஷ் திறக்கப் படாமல் இருக்கும் சமூகநலக் கூடத்தையும் மீன் மார்க்கெட் வளாகத் தையும் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன் என்று வாக்கா ளர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார். திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்மாள் வார்பேட்டை 75வது வட்டத்தில் திமுக சார்பில் வெற்றி வேட்பாளர் வளம் வருகிறார். கழகத்தில் தீவிர உறுப்பினரும் சென்னை கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளராக பணி யாற்றி வரும் லோகேஷின் மனைவியான ரமணி சட்டம் பயின்றவர். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் உங்க ளது செயல்பாடு எப்படி இருக்கும் என்று கேட்ட போது அவர் கூறியதாவது, நம்மாள்வார்பேட்டை என்பது என் பூர்வீக மண், எங்களின் மக்களின் அடிப் படை பிரச்சினைகள் நன்கு அறிவேன். கடந்த 10 ஆண்டு களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளை வைத்து ஊழல் செய்த அதிமுகவுக்கு இந்த தேதியில் அரசியல் ரீதியாக பாடம் புகட்டுவோம். நம்மாள்வார்பேட்டை, சுப்பராயன் 1 முதல் 5 வரையி லான தெருக்கள், ஒத்த வாடை தெரு, சங்கர பக்தன், சாமி பக்தன் தெரு, எஸ்விஎம் நகர், எஸ்.எஸ். புரம் ஏ, பி பிளாக், தலைமைச் செயலக குடியிருப்பு பகுதிகளில் குடிநீர், சாலை வசதிகள் இன்னும் மேம்பட உறுதுணையாக இருப்பேன்.
கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் சமூக நலக்கூடம், மீன் விற்பனை வளாகத்தை உடனே திறக்கப்படும், மழைநீர் வடிகால்வாய் முழுமையாக சீரமைக்கப் படும்,சென்னை மாநகராட் சியில் தூய்மையான பகுதி யாக எனது வட்டத்தை மாற்றுவேன். தளபதியின் நல்லாட்சியில் உள்ளாட் சியை இன்னும் பலப்படுத்த கடுமையாக உழைப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்று எங்களதுவெற்றி வாய்ப்பை உறுதிசெய்து வருகின்றனர். கழகத்தோழர்கள், முன்னாள் கவுன்சிலர் தேவி உள்ளிட்ட மக்கள் நலன் விரும்பிகளின் ஒத்துழைப் போடு அரசின் திட்டங்களை மக்களுக்கு பாரபட்சம் இன்றி எடுத்து செல்வோம். திமுக தலைமையில் நடை பெறும் இந்த உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் எங்கள் அணி மகத்தான வெற்றி பெறும் என்று கூறிய வேட்பா ளர் ரமணி எந்த நேரத்திலும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து பணி செய்வேன் என்றார்.