districts

சாலை  விபத்தில் கணவன் மனைவி பலி

சிதம்பரம், ஏப். 4- புவனகிரி அருகே மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதியர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. கடலூர் மாவட்டம் புவன கிரி அடுத்த அதிவராகநத்தம் கிராமத்தின் அருகே சேலத்திலிருந்து புவனகிரி நோக்கி சென்று கொண்டி ருந்த கார் திடீரென்று டயர் வெடித்த நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது புவனகிரியில் இருந்து சேத்தியாதோப்பு நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டர் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி காவல் துறை யினர் உயிரிழந்த இரு வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பலியான இருவரும் கம்மா புரம் அருகே உள்ள சிறு வரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், விஜயா என்பதும், இவர்கள் புவனகிரி அருகே உள்ள மேலமணக்குடி கிராமத்தில் வசிக்கும் உறவினரிடம் தங்களது மகன் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றதும் தெரியவந்தது.