திருவள்ளூர், செப்.25- வல்லூர் அனல் மின் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 2000 ஒப்பந்த தொழிலாளர்க ளையும் நிரந்தரப்படுத்த வலியுறுத்தி நடைபெற்று வரும் உண்ணாநிலைப் போராட்டத்தின் 11 ஆவது நாளான திங்களன்று (செப்.25) சங்கத்தின் கிளை செயலாளர் சதீஷ் தலைமை யில் நடைபெற்றது. அதை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர். ெஜய ராமன் பேசினார். அப்போது, திருவொற்றியூர்-எண்ணூர் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்ட நிதியாக ரூ.3 ஆயிரம் வழங்கினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்ர.விச்சந்தி ரன் , மாவட்ட துணைத் தலை வர்கள் ஜி.விநாயகமூர்த்தி, எஸ்.நரேஷ் குமார், வடசென்னை அனல்மின் நிர்வாகிகள் இ.ஜெயவேலு, சலில் குமார், கிளை நிர்வா கிகள் சதீஷ், பிரபாகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.