districts

சென்னை முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளியை அலைகழித்த அதிகாரி
நேரில் ஆஜராக மனிதஉரிமை ஆணையம் சம்மன்

திருவள்ளூர், மார்ச் 11- திருநின்றவூரைச் சேர்ந்த மாற்றுத்திற னாளியான ஞானவேல் என்பவரின் மனைவி ராஜம்மாள். இவர் பார்வை திறன் குறைபாடு உடையவர். இவரது கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததால், இறுதிச் சடங்கு செய்யப் பணம் இல்லாமல் செய்வதறியாது தவித்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி நலத்துறை வாரியத்தால் வழங்கப்படும் ரூ.17 ஆயிரம் பெற திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனி வாசனை அணுகிய போது, இறப்பு சான்றிதழ் பெற்று வரும் படி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த மாற்றுத்திறனாளி நலவாரிய உறுப்பினர் சிம்ம சந்திரன் என்பவர் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தின் இயக்குநர் லட்சுமியைத் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது லட்சுமி உடனடியாக ரூ.2 ஆயிரம் வழங்கச் சீனிவாசனுக்கு உத்தர விட்டுள்ளார். இந்நிலையில், சீனிவாசன் ராஜம்மாளி டம் கூகுள் பே எண்ணை அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். அப்போது ராஜம்மாள் தன்னிடம் கூகுள் பே வசதி இல்லை என்பதால், வேறொருவர் எண்ணுக்கு அனுப்பும் படி கூறி உள்ளார். ஆனால் வேறு எண்ணுக்கு அனுப்ப முடியாது என சீனிவாசன் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் உடலை நீண்ட நேரம் வைத்திருந்த நிலையில், சிம்ம சந்திரன் தன் நண்பர்களின் உதவியுடன் இறுதிச் சடங்கு செய்ய ராஜம்மாளுக்கு உதவி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகத் நாளிதழில் வெளியான செய்தி யின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சீனிவாசன் வரும் மார்ச் 19ஆம் தேதி நேரில் ஆஜராகிப் பதி லளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

புதுச்சேரி- திருப்பதி ரயில் சேவை ரத்து
திருத்தணி வரை மட்டுமே இயங்கும்

காஞ்சிபுரம், மார்ச்.11 - புதுச்சேரி- திருப்பதி ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு அந்த ரயில் திருத்தணி வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒன்றிய அரசு நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலை யங்களை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என அறிவித்தது. இதில் குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதி கம் வரும் ரயில் நிலையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப் பட்டு நவீன ரயில் நிலையமாக மாற்றப் படும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் நாள்தோறும் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி ரயில் நிலையம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட உள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் வரும் 12ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டும் மாற்றங்களும் மேற் கொள்ளப்பட்டு இதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. அவ்வகையில் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு காஞ்சிபுரம் வழியாக செல்லும் 16112 எண் கொண்ட ரயில் நாள்தோறும் சென்று வருகிறது. இதில் காஞ்சிபுரத்திலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், சென்னைக்கு மருத்துவ சேவைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கில் இந்த ரயிலில் பயணித்து செங்கல்பட்டு வரை சென்று அங்கிருந்து மின்தொடர் வண்டி மூலம் பல்வேறு பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இந்த ரயில் சேவை நிறுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அடுத்து வரும் கூட்ட நெரிசல்கள் மற்றும் பொது மக்கள் பெரிதும் இன்னலுறும் நிலையில் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என காஞ்சிபுரம் சென்னை ரயில் பயணிகள் சங்க செயலாளர் ரங்கநாதன் ரயில்வே நிர்வாகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தார். இதனை பரிசிலினை செய்த ரயில்வே நிர்வாகம் புதுச்சேரியில் இருந்து திருத்தணி வரை இந்த ரயில் சேவை செயல்படும் என அறிவித்துள்ளது. திருத் தணியில் இருந்து திருப்பதி வரை இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறி வித்துள்ளது.

கணக்குப்பதிவியல் தேர்வு மிகவும்  எளிதாக இருந்தது: மாணவர்கள்

சென்னை, மார்ச்11- தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக் கான பொதுத்தேர்வு, மார்ச் 1ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரையில் நடை பெறுகிறது. இந்நிலையில் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடத்திற்கான தேர்வு திங்களன்று (மார்ச் 11)  நடைபெற்றது. இத்தேர்விற்கு 7 லட்சத்து 53 ஆயிரத்து 364 பள்ளி மாணவர்கள் மற்றும் 9 ஆயி ரத்து 507 தனித்தேர்வர்கள் என, மொத்தம் 7 லட்சத்து 63 ஆயிரத்து 364 பேர் அனு மதிக்கப்பட்டனர். இவர்களில் 11 ஆயிரத்து 139 பள்ளி மாணவர்கள் மற்றும் 1,436 தனித்தேர்வர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 575 பேர் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வினை எழுத வரவில்லை. இந்நிலை யில், கணக்குப்பதிவியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரி வித்தனர். மேலும், வேதியியல் தேர்வினை எழுதிய மாணவர்கள், 2 மதிப்பெண் வினாக்கள் சற்று சிந்தித்து எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளனர்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 11- சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. நாள் ஒன்றுக்கு குடிநீர் நிலையங்களில்ஒருவருக்கு ஒரு கேன் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் கார்களை கழுவ குடிநீரை பயன்படுத்தக்கூடாது போன்ற பல்வேறு  உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. விரைவில் மிகக் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்று கேட்டால் அதற்கான வாய்ப்பு குறைவுதான் என்றாலும், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் அருகில் உள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியும் நிரம்பியது. இதனால் தண்ணீர் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது பூண்டி ஏரியில் 140 அடிக்கு 135 அடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் 65 அடிக்கு 58 அடியாக உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 50 அடியில் தற்போது 46 அடி உள்ளது. அதேபோல் கண்டிகை ஏரியில் 115 அடிக்கு 114 அடி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவான 85 அடியில் தற்போது 83.18 அடி உள்ளது. மேலும் வீராணம் ஏரியில் 47 அடியில் 37 அடி நீர் இருப்பு உள்ளது. அடுத்த 3, 4 மாதங்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் மட்டுமே வரும் வெயில் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி இருக்கலாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளைஞர் தற்கொலை

சென்னை, மார்ச் 11- சென்னை புரசைவாக்கத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார். புரசைவாக்கம் பொன்னியம்மன் கோயில் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஜோ.ஜோஸ்வாராஜ் (31). இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், குழந்தை இல்லாததால் விரக்தியில் இருந்துள்ளார்.  இந்நிலையில் ஜோஸ்வாராஜ், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த ஓட்டேரி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, ஜோஸ்வாராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புழல் சிறையில்  செல்போன்கள் பறிமுதல்

சென்னை, மார்ச் 11- சென்னை புழல் சிறையில் 3 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை கைதிகள் சிறையில், சிறைத்துறை காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த சிறையின் விளையாட்டு அரங்கு இருக்கும் பகுதியில் சிறைக் காவலர்கள் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கைப்பேசி, சார்ஜர், சிம்கார்டு,பேட்டரி ஆகியவற்றை கைப்பற்றினர். அதேபோல் விசாரணைக் கைதிகள் சிறையில் சோதனையிட்டனர். அங்கு 8 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் இருந்து 2 கைப்பேசிகள், 2 சார்ஜர், 2 சிம்கார்டு, 2 பேட்டரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிறைத்துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், கைப்பேசியை பயன்படுத்தியதாக 8 விசாரணைக் கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் மீது  கொலை வெறித்தாக்குதல்

கிருஷ்ணகிரி, மார்ச் 11-  மகராஜகடை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி  அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில்  10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  அண்மையில்  கெட்டூா்-கம்மம்பள்ளி  சாலையில் மாலை நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார்  சைக்கிளில் வந்த 3 பேர் அந்தச்  சிறுமியை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு கட்டாயப்படுத்தி யுள்ளனர். மாணவி மறுத்ததால் மா்ம நபா்கள் ஆயுதங்களால் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால்  மாணவியில் கழுத்து, கை  உள்ளிட்ட பகுதியில் பலத்த ரத்தக்  காயங்கள் ஏற்பட்டுள்ளது.அப்பகுதி யில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், மகராஜகடை காவல்துறையினர் வழக்குப் பதிந்து மாணவி மீது தாக்குதல் தொடுத்து  தலைமறைவாக உள்ள மா்ம நபா்களைத் தேடி வருகின்றனர்.

பெரணமல்லூர் பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் 

திருவண்ணாமலை, மார்ச்.11- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் இடதுசாரிக் கட்சிகளின் முயற்சியால் சட்டம் ஆக்கப்பட்டது.  இச்சட்டத்தை ஒழித்துக்கட்ட பா.ஜ.க அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாய  தொழிலாளர் சங்கத்தின் தொடர்ச்சி யான போராட்டங்களால் இத்திட்டம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பெரணமல்லூர் பேரூராட்சி முதல் மற்றும் இரண்டாம் வார்டு உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இத்திட்டத் துவக்க நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வில் பங்கேற்று பேரூராட்சி  தலைவர் வேணி ஏழுமலை துவக்கி  வைத்தார். பெரணமல்லூர் ஊராட்சி  ஒன்றியக்குழு தலைவர் இந்திரா இளங்கோவன் பேரூராட்சி உறுப்பினர் கள், துணைத்தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்ற னர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  ந.பாண்டுரங்கன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரணமல்லூர் வட்டார செயலாளர் பெரணமல்லூர் சேகரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பெரணமல்லூர் வடக்குப் பகுதியில் உள்ள குளம் தூர் வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டது. திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

சிஎஸ்கே போட்டிக்கு ஆன்லைன் டிக்கெட்

சென்னை, மார்ச்11- இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சேப்பாக்கத்தில் 22ம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக சர்ச்சை எழுந்தது.

பேருந்து மோதி தொழிலாளி பலி

சென்னை, மார்ச் 11- அரியலூரைச் சேர்ந்தவர் கணேசன் (42). இவர்சென்னை தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில்தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கணேசன், ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்த பின்னர் திருவொற்றி யூர் நெடுஞ்சாலையில் கணேசன், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு உணவகத்திடம் உள்ள பேருந்து நிறுத்ததில் இருந்து எண்ணூர் நோக்கி புறப்பட்ட பேருந்து திடீரென கணேசன் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த கணேசன் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.