districts

img

சிபிஎம், மலைவாழ் மக்கள், விவசாயிகள் சங்க போராட்டம் வெற்றி பட்டியலின குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா

கிருஷ்ணகிரி, செப்.17- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்தில் தட்சண திருப்பதி, உத்தனப்  பள்ளி சின்னகுத்தி, பண்ணல் நத்தம், ராமன் தொட்டி, ராமன் தொட்டிகேட் பகுதி களில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு வீட்டு மனை பட்டா, ஆதார் அட்டை, சாதி சான்று, குடும்ப அட்டை, அடிப்படை வசதி கள் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக வட்டாட்சி யர், சாராட்சியர்,மாவட்ட ஆட்சியர் அலு வலகங்கள் முன்பு 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடை பெற்று வந்தது. இதன் விளைவாக, சூளகிரி உத்தனப் பள்ளி பகுதிகளில் 20 க்கும் மேற்பட்டவர்க ளுக்கு ஏற்கெனவே பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தனப்பள்ளியில் சாலையை ஒட்டியுள்ள பட்டியலினத்தைச்சேர்ந்த 8 குடும்பங்களுக்கு பட்டா மற்றும் தொகுப்பு வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கினார்.இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.முருகேசன் உடனிருந்தார்.