சென்னை, ஜூன் 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத் தையடுத்து, கே.பி.பூங்கா குடியிருப்பில் 178 குடும்பங்களுக்கு தமிழக அரசு வீடு ஒதுக்கீடு செய்துள் ளது. வீடுகளை ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: 59வது வட்டம், கூவம் ஆற்றங் கரையோரம் உள்ள சத்தியவாணி முத்து நகர், காந்திநகர், இந்திரா காந்தி நகர் பகுதிகளில் பல தலைமுறைகளாக மக்கள் குடி யிருந்து வந்தனர். 2020ம் ஆண்டு டிசம்பர் 10ந் தேதி அங்குள்ள மக்களை அதிமுக அரசு காவல்துறை துணையோடு வெளியேற்ற முயற் சித்தது. இந்த வலுக்கட்டாய மறு குடியமர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள பெரும்பாக் கத்தில் குடியமர்த்துவதற்கு எதிராக 178 குடும்பங்கள் கூவம் கரை யோரம் தங்கி போராடி வந்தது. இந்தப் பகுதிக்கு அருகாமையில் உள்ள கே.பி.பார்க் குடியிருப்பில் வீடு களை ஒதுக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி அமைச்சர்கள், அதிகாரிகளை 2 வருடமாக பலமுறை சந்தித்து மனு கொடுத்ததோடு, போராட்டங்களை நடத்தியது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடமும் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டு வந்தது. கடந்த ஏப் 29ந் தேதி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநரை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச் சியாக கூவம் கரையோரம் போராடி வந்த மக்களை, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., மேயர் பிரியாராஜன் ஆகியோர் சந்தித்து 178 குடும்பங்களுக்கும் கே.பி.பார்க் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக் கையை ஏற்று சென்னை மாநகரத்திற் குள்ளே கே.பி.பார்க் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்த முதலமைச்சர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வாரிய மேலாண்மை இயக்குநர், 2 ஆண்டுகளாக மக்க ளின் போராட்டத்திற்கு துணை நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாநில செயற்்குழு உறுப்பினர் க.கனகராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.