districts

img

இரவு நேரங்களில் ஓட்டல்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்

சென்னை,பிப்.25-  தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பிறகு ஓட்டல்களில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.  சென்னை போன்ற பெருநகரங்களில் 24 மணி நேரமும் செயல்பட மத்திய அரசு வழிவகை செய்து உள்ளது. இரவு நேரங்களில் முழுமையாக ஓட்டல்கள் செயல்பட அனுமதி இருந்தும் கூட ஒரு சில பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.  10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முறை யான உரிமம் பெற்ற உணவகங்கள் தடை யின்றி செயல்படலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்த போதிலும் இரவு 11 மணிக்கு மேல் மூடுமாறு காவல்துறை யினர் கூறுகின்றனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சி னையை காரணம் காட்டி ஓட்டல்களை மூடச் சொல்வது இத்தொழிலை நசுக்கு வதற்கு சமமாகும். டீக்கடைகள், ஓட்டல்கள் அதிகாலையில் திறந்தால் தான் வியாபாரம் செய்ய முடியும் என அரசுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.