கிருஷ்ணகிரி, டிச.7 - 2017 ஆம் ஆண்டு ஓசூர் ஆனந்த பவன் அருகில் தொடங்கப்பட்டது டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜூவல்லரி. தற்போது இதன் அருகில் பிரமாண்டமான புதிய கட்டிடத்தில் இரண்டாவது கடையைத் திறந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் டைட்டன் தொழிற் சாலையின் உற்பத்தி பிரிவு இணை துணைத் தலைவர் ஜூவல்லரி ஷரத்,தெற்கு மண்டல வணிக தலைவர் அஜய் திவிவேதி, ஆர்பிஎம் நரசிம்மன் ஆகியோர் கடையை திறந்து வைத்து முதல் மூன்று வாடிக்கை யாளர்களுக்கு நகைகளை வழங்கினார்கள். சிறு,குறு தொழில் நிறுவனங்களின் சங்க தலைவர்கள், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனிஷ்க் நகை கடைக்கு இந்தியா முழுவதும் 410 கிளைகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 56 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வெளிநாடுகளில் 10 கிளைகளும் உள்ளன. ஓசூரில் இரண்டாவதாக தொடங்கியுள்ள தனிஷ்க் நிறுவனம் 8,700 சதுர அடி பரப்பில் 3 தளங்களை கொண்டதாகும். துவக்க சலுகையாக 3 நாட்களுக்கு வாங்கும் தங்க நகைகளுக்கு ஏற்ப தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் நகை சீட்டுகள் திட்டம், நகையை மாற்றிக் கொள்ளும் திட்டம், இழப்பு ஏதும் இல்லாமல் செய்கூலி சேதாரம் 15 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தங்கம், வைரம், போக்கி குந்தன், பிரைடல் சேகரிப்புகள் உள்ளடக்கிய பரந்த மக்கள் அளவினால் விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மோதிரம், கழுத்து சங்கிலி, நெக்லஸ், ஒட்டியானம் காது அணிகலன்கள், வளையல் உள்ளிட்ட அனைத்து விதமான அனைத்து வடிவங்களிலான அனைத்து ஆபரணங் களும் இங்குள்ளன என்றும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.