districts

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் தங்கும் விடுதி !

சென்னை,செப்.17- சென்னை மாநில கல்லூரியில் லிப்ட் வசதியுடன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.  இந்த கல்லூரியில் இளநிலை படிப்பு களில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை  எண்ணிக்கை வெறும் 1140 மட்டுமே. குறைந்த கட்டணத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் தரமான கல்வியை பெறுவதற்கு ஏற்ற இடம்  என்பதால் இந்த கல்லூரிக்கு எப்போ துமே மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கல்லூரியில் பல்வேறு துறை கள் இருந்தாலும், காது கேளாதோர் மற்றும் பார்வையற்ற மாணவர் களுக்கான பட்ட படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இளங்கலை பட்ட படிப்பு களில் பி.காம்., பி.சி.ஏ.வில் இவர் களுக்கு என்று தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இளங்கலை படிப்புகளை முடித்து, முதுகலை படிப்பை தொடர்வதற்கு ஏதுவாக எம்.காம். படிப்பும் 2022-23ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.  தமிழ்நாட்டிலேயே அரசு உதவி யுடன் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்த படிப்புகளை பயில்வது இங்கு மட்டும் தான். அதன்படி இங்கு 350 மாற்றுத்திறனாளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பலரும் வெளியூர்களில் இருந்து இங்கு உள்ள கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கின்றனர். பொதுவான விடுதியாக இல்லா மல் மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கென பிரத்தியேக தங்கும் விடுதி கட்டிதரப்படும் என கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற கல்லூரி யின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித் திருந்தார். அந்த அறிவிப்பின்படி,  ரூ.21 கோடியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தங்கும் விடுதி தயாராகி உள்ளது. 210 பேர்  தங்கும் வசதியுடன் மாணவ, மாணவி களுக்கென தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களுக்கென பிரத்தியேக அறைகள், எளிதாக கையாளக்கூடிய கழிவறைகள், லிப்ட் வசதி மற்றும் சிறப்பு நடைமேடை யுடன் இந்த விடுதி வடிவமைக்கப் பட்டுள்ளது.  இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராமன் கூறுகையில், ‘‘மாநில கல்லூரி  என்றாலே மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். காரணம் இங்கு  கிடைக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி, மற்றும் சிறந்த வளாகம்,  அடிப்படை வசதிகள் என அனைத்தும் மாணவர்களுக்கு கிடைக்கும். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் பல திட்டங்களை இந்த வளாகத்தில் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த தங்கும் விடுதியும் ஒன்று. மேலும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இந்த விடுதி அமைந்திருப்பதால் மாண வர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது.  தற்போது விடுதியின் மொத்தப்பணி களும் நிறைவடைந்து விட்டது. விரை வில் முதலமைச்சர் தலைமையில் இதன் திறப்பு விழா நடைபெறும். அன்று  நமது கல்லூரிக்கு மேலும் ஒரு சிறப்பு  சேரும்,’’ என்றார்.