பணி மாறுதல்களில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க கோரி செவ்வாயன்று (ஜூலை 12) தமிழகம் முழுவதும் தோட்டக் கலைத்துறை அமைச்சுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக சென்னை நந்தனத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப்பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொருளாளர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் பேசினர்.