districts

விமானத்தில் கடத்தப்பட்ட குரங்கு குட்டிகள் பறிமுதல்

சென்னை,நவ.29- சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் அரிய வகை  4 குரங்குகள் கடத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கான எந்த ஆவ ணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவரிடம் இல்லை. மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாது காப்பு துறையில் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறை யிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். ஆனால் அவரிடம் எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது அதில் 2 குட்டிகள் இறந்து கிடந்தன. 2 குட்டி கள் மட்டும் உயிருடன் இருந்தன. அதில் உயிருடன் இருந்த 2 குரங்கு குட்டி களும், உலகிலேயே நீண்ட வாலுடன் கூடிய சிறிய குரங்கு இனமான ‘பிக்மி மார்மோசெட்’ என்ற வகையை சேர்ந்தவைகள் என தெரியவந்தது. இவை தென் அமெரிக்காவின் மேற்கு அமேசான் படுகையில் உள்ள மழைக்காடுகளை பூர்வீகமாக கொண்ட குரங்கினம். பிரேசில், கம்போடியா மற்றும் பெரு நாட்டிலும் காணப்படுகிறது. உயிருடன் உள்ள மற்ற 2 குரங்கு குட்டிகளையும் மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.