districts

சென்னை சிறப்பு குழந்தைகளுக்கு உதவி

சென்னை, ஜூன் 15-  அறிவுசார் குறைபாடு கள் உள்ள குழந்தைகளுக்கு  உதவிடும் வகையில் சென்னையில் 9வது ஆண்டாக “சாத்தியங்கள் வாரம் கடைபிடிக்கப்பட்டது. 

அப்வி மருந்து நிறுவனம்  ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச் சியில் ஐ வாலண்டீர் என்னும் தொண்டு அமைப்பின் தன்னார்வலர்கள் ஏராள மான பேர் கலந்து கொண்ட னர். இது ஒரு உலகளாவிய  தன்னார்வத் திட்டமாகும். இது உள்ளூர் சமூகங்களுக் குத் உதவிடும் வகையில்  ஊழியர்கள்  ஒருங்கிணைக் கப்படுகின்றனர்.  

இது குறித்து அப்வி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் பட்டத்தில் கூறுகையில், 6 முதல் 18 வயதுக்குட்பட்ட அறிவுத்திறன் குறை பாடுள்ள பெண் குழந்தை களுக்கு உதவி செய்து வரும்  ஸ்ரீ அருணோதயம் அறக் கட்டளையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள்  மிகவும் மகிழ்ச்சி அடைகி றோம். எங்களின் வருடாந்திர தன்னார்வ திட்டங்களில் ஒன்றான ‘சாத்தியங்களின் வாரத்தின்’ போது, உலகம் முழுவதும் ஆயிரக்கணக் கான அப்வி நிறுவன ஊழியர்கள் ஒன்றுகூடி தங்கள் பகுதியில் உள்ள உள்ளூர் சமூகத்தை வலுப் படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.