வேலூர், ஜூன் 3-
வேலூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாநக ராட்சி பகுதியுடன் இணைக் கப்பட்ட பகுதிகள், பழைய நகராட்சி எல்லைக் குள் விடுபட்ட பகுதி களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடி வடைந்த நிலையில், தற் போது சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக் கின்றன.
அதேபோல் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் - ஆற்காடு சாலையை ஒட்டிய காகிதப் பட்டறை, சாரதி நகர், எல்ஐசி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் பிரதான குழாய் இணைப்பு ஆற்காடு சாலையில் வரு வதால் ஆற்காடு சாலையி லும் பாதாள சாக்கடை திட்டப்பணியும், அங்குள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங் கும் பணியும் நடைபெற்றது. இந்த பணிகளால் சைதாப் பேட்டை முருகன் கோவில் தொடங்கி சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் நெடுஞ்சாலை இணைப்பு வரை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை குண்டும், குழியு மாக மாறி விட்டது.
இதனால் வாகன ஓட்டி கள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் முருகன் கோவில் அருகே சாலை சீரமைப்பு பணிகள் சனிக் கிழமை தொடங்கியது. சாலையில் வரும் வாகனங்கள் எதிர் எதிரே வருவதால் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடும் அவதி யடைந்தனர். இதனைத் தவிர்க்க இரவு நேரங்களில் பணிகளை மேற்கொண்டு, விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும், வணிகர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.