விழுப்புரம்,ஏப்.9- விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு பணம் கொடுக்காமல் ரூ.11.25 லட்சத்தை மோசடி செய்த அரிசி ஆலை உரிமை யாளரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட அப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவர் செஞ்சியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நெல் வியா பாரம் செய்து வருகிறார். இவருக்கு நெல் வியாபாரம் மூலம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், சேவூரை சேர்ந்த அரிசி ஆலை நடத்தி வரு பவரான ஜீன செல்வம் (62) என்பவர் அறி முகமானார். ஜீனசெல்வம், நெல் மூட்டை களை கொள்முதல் செய்து பணப்பட்டு வாடா செய்து வந்ததால் அந்த நம்பிக்கை யின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2018 வரை குமார், அப்பம்பட்டில் உள்ள விவசாயிகளிடமிருந்து 100 கிலோ எடை கொண்ட 721 நெல் மூட்டைகளை பெற்று அதனை 2 லாரிகளில் ஏற்றி ஜீனசெல்வத்துக்கு அனுப்பினார். ஆனால் அந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்த ஜீனசெல்வம் அதற்கு கொடுக்க வேண்டிய ரூ.11 லட்சத்து 25 ஆயிரத்தை விவசாயிகளுக்கு வழங்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவ சாயிகள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரி வில் புகார் செய்தனர். அதன்பேரில் ஜீன செல்வம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.