districts

ரயிலில் கடத்தி வரப்பட்ட ஹவாலா பணம் ரூ.40 லட்சம், வைர நகைகள் பறிமுதல்

சென்னை, டிச. 7- சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.40 லட்சம் ஹவாலா பணம் மற்றும் வைர நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் வெளி யூர்களுக்கு செல்லும் ரயில்கள் அதிகம்  இயக்கப்படுகிறது. சென்னை சென்டரலி லிருந்து வெளிமாநிலங்ளுக்கு அதிகமாக ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில் நிலை யங்களில் ரயிலில் சட்டவிரோதமாக பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படு கிறதா என, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறை யினருடன் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 1இல், ஆந்தி ராவில் இருந்து சென்னை வந்த ஷிவ மொக்கா விரைவு ரயிலில் வந்த கோபால் என்ற பயணியை மடக்கி, அவரது உடமை களை சோதனையிட்ட போது, அதில் ரூ. 40 லட்சம் ஹவாலா பணம் மற்றும் சேத மடைந்த வைர நகைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த நகை மற்றும் பணத்திற்கு ஏதேனும் ஆவணம் உள்ளதா என்று அதனை எடுத்து வந்த கோபால் என்ப வரிடம் விசாரணை செய்யப்பட்டது. ஆனால் கோபால் கொண்டு வந்த வைர நகை  மற்றும் ரூ.40 லட்சம் பணத்திற்கு ஆவணம் எதுவும் இல்லாததை அடுத்து ரயில்வே காவல் துறையினர் அதனை பறிமுதல் செய்த னர். பின்னர் கோபாலை ஆர்.பி.எப். காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.