சென்னை,ஏப்,7- சென்னையில் ஞாயி றன்று (ஏப்.7) நடைபெற்ற தேசிய அளவிலான ஐவர் கால்பந்து இறுதி போட்டியில், ஹரியானா சிட்டி எப்சி அணி வெற்றி பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒருகோல் போட்டு சம நிலை பெற்றன. இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடை பிடிக்கப்பட்டது. அதில் நிதானத்தைக் கடைப் பிடித்த டெல்லி அணி, இறுதி யில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பட்டம் வென்ற ஹரி யானா சிட்டி எஃப்சி அணி மான்செஸ்டரில் உள்ள உலக புகழ்பெற்ற ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. இதற்கான செலவு முழுவதையும் அப்போலோ டயர்ஸ் நிறுவனம் ஏற்கிறது. மான்செஸ்டர் நகரம் உலகப்புகழ்பெற்ற கால்பந்து அணியான யுனை டெட் எஃப்சி அணியின் தாய கம் ஆகும். உலகளவிலான சாம்பியனை தேர்வு செய்யும் இறுதிப் போட்டி வரும் மே 31 ஆம் தேதி அங்கு நடைபெறவுள்ளது என்று அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் விளையாட்டு பிரிவின் அதிகாரி ரெமுஸ் டி குரூஸ் கூறினார்.