districts

img

நெசவாளர்களுக்கு உரிய நிவாரணம் கைத்தறி பட்டு நெசவாளர் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை, டிச. 2 –  ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், வாழைப்பந்தல் கிராமம் அதை சுற்றி யுள்ள பகுதிகளில் உலக புகழ்பெற்ற காஞ்சி புரம் ஆரணி பட்டு சேலைகள் மற்றும் முகூர்த்த சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு பலருக்கு இன்னும் தேசிய கைத்தறி நெசவாளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி  உபகரணங்கள் கிடைக்காததால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பின்தங்கியே உள்ளது. மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு  எந்தவித சமூக பாதுகாப்பு திட்டங்கள் கிடையாது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரண மாக தொடர் மழையால் நெசவாளர்களின் கால்குலி பள்ளத்தில் பூமி ஊற்று தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் நெசவுத் தொழில் பாதிப்பு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். நெசவு செய்ய முடியாமல் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.  நெசவாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக உரிய நிர்வாணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  சிஐடியு கைத்தறி பட்டு நெசவாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.